Sunday, April 10, 2011

வேறொருவர் உங்கள் வாக்கை செலுத்தி இருந்தால்

வாக்களிக்க செல்லும் போது ஏற்கெனவே உங்களுடைய பெயரில் வேறு யாரேனும் வாக்களித்து இருந்தால் அந்த தகவல் உங்களுக்கு தெரிவுக்கப்படும்.

நீங்கள் வாக்களிக்கவில்லை   என்பதை  தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றால் தேர்தல்   சட்டத்தின் '49 B' பிரிவின்படி வாக்கு சீட்டு தரப்படும்.

இதன் பிறகு வாக்கு சீட்டு முலம் வாக்களிக்கலாம். இந்த சீட்டுகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும். இதற்கு டெண்டர் வாக்குகள் எனப் பெயர்.

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இருக்கும் போது மட்டும் இந்த வாக்குகள் எண்ணப்படும்.   

(source: Town times)