Friday, December 31, 2010

எ-கலப்பை - இலவச தமிழ் தட்டச்சி மென்பொருள்

அன்புள்ள தமிழ் பிரியர்களே...

அன்மையில் ஒரு தமிழ் website என் கண்ணுக்கு தென்பட்டது.... அது மிகவும் அருமையாக இருந்தது.... அதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்.


இது ஒர் இலவச தமிழ் தட்டச்சு மென்பொருள்....



இதை windows OS யில் பதிவிரக்கம் செய்து, உபயோகப்படுத்திக்கொள்ளாம்...

பின்பு நீங்கள் கீழ்காணும் படத்தில் உள்ளது போல்.....setting செய்துக்கொள்ளுங்கள்....



குறிப்பு: F2 key - தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற.... அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற உதவும்....


http://thamizha.com/project/ekalappai

Wednesday, December 8, 2010

நாளைய இந்தியா

நான் விரும்பும் நாளைய இந்தியா.

1) லஞ்ச ஒழிப்பு

நம் நாட்டில் யாரும் விரும்பி லஞ்சம் தருவது இல்லை. எல்லாம் சரியாக நடந்தால், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது எல்லோரும் அறிவார்.

இருப்பினும் இந்தியாவின் வேர் முதல் துளிர் வரை பரவியுள்ள லஞ்சத்தை ஒழிக்க சில யோசனைகளை முன் வைக்கிறேன்.

*லஞ்ச ஒழிப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தினசரி பத்திரிக்கைகள் முலம் விளம்பரம் செய்யவேண்டும்.

*எல்லாம் அரசு துறைகளும் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்க வேண்டும்.

* சாலை பணிகள், பாலம் முதலியவை யாரால், எவ்வளவு செலவு, திட்ட பணிக்காலம் அனைத்து அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்யவேண்டும்.

* தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் (குறிப்பாக P.F கணக்கு வைத்திருப்போர்) பெயரை மாநில வேலைவாய்ப்பு பணி மூப்பு பட்டியலில் இருந்து நிக்கப்படவேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதும், உரியவர்களுக்கு வேலையும் நேரத்தில் கிடைக்கும்.

* பள்ளி, கல்லூரி, பல்கலை கழகம் ஆகியவற்றில் கட்டணத்தை வங்கிகளில் கட்டும் முறை வந்தால், அதிக கட்டணம் வசுலிபதை அரசுகள் கண்காணிக்க முடியும்.

* எல்லா கடைகளிலும் உள்ள சரக்குகள் எத்தனை என்பதை கடைகளுக்கு முன் பட்டியலிடவேண்டும். இதன் முலம் பதுக்களை தடுக்கமுடியும்.

* 3 லச்சத்திர்க்கு மேல் நிலபத்திர பதிவு நடந்தால் PAN-Card, Form-16 அவசியமாகக படவேண்டும் - பினாமிகளை தடுக்க

*
தொகுதி மேம்பாடு நிதியை பயன்படுத்தாத அல்லது 50% குறைவாக பயன்படுத்திய MLA, MP பதவிகளை பறிக்க வேண்டும். - தேர்தல் ஆணையம் இதை செய்யவேண்டும்.




* எல்லா அரசு பணிகளில் உள்ள காலியிடத்தையும் 3 மாதத்திர்க்குள் நிறப்பப்பட வேண்டும்.

* ஒருவருக்கு ஒரு P.F Acc. என அறிவிக்கப்படவேண்டும். அதில் உள்ள பணத்தை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது பணிமுடிவின்  போது வழங்கப்படவேண்டும்.


*காவல் துறைக்கு புகார்களை... இனையதளம் முலம் பெருதல் வேண்டும்... இதன் முலம் புகாரின் சரியான நிலவரம் உடனுக்குடன் தெரியவரும்..



2) சுகாதாரம்

* ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு பொது கழிப்பிடம் அவசியம் அமைதல் வேண்டும்.

* பாக்கெட் / பாட்டில் குடிநீர் விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். சமயங்களில் இளநீர் விலையை விட பாட்டில் குடிநீர் விலை அதிகம்....

* தரமில்லா பாக்கெட் / பாட்டில் குடிநீர் விற்பனையை தடுக்க வேண்டும்.

*

Friday, July 30, 2010

இனிய தமிழ் பாடல்கள்

நான் விரும்பிய பாடல்கள் .......

ஆயர்பாடி மாளிகையில்
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே
தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம்
பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

========================================================

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை!
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!

ஆட பிறந்தவளே ஆடிவா!
புகழ் தேட பிறந்தவளே பாடிவா!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!

இடை என்னும் கொடியாட நடமாடிவா!
குழல் இசை கொஞ்சி விளையாட நீயாடிவா!
தடை மீறி போராட சதிராடிவா!
தடை மீறி போராட சதிராடிவா!

செந்தமிழே நீ பகை வென்று முடிசூடவா
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!

மயிலாட வான்கோழி தடை செய்வதோ!
மாகுயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ !
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ!
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ!

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ!
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ!
புயலுக்கும் நெருப்புக்கும் சிறை போடவோ!
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
================================================
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

Friday, July 23, 2010

உலக அறிஞர்களின் அறிவுரைகள்

(1) அறிவு மவுனத்தைக் கற்று தரும்;
அன்பு பேசக் கற்றுத் தரும்! - ரிக்டர்

(2) அனுபவப் பள்ளிக் கூடத்தில் இலவசக் கல்விக்கு இடமில்லை.

(3) நான் இன்று செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு தான்.
ஒன்று பணக்காரன் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறியச் செய்யவேண்டும். மற்றொன்று ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பணக்காரர்கள் அறியச் செய்யவேண்டும் . - டீன் அப் கீசன்.

(4) கண்கள் தங்களை நம்புகின்றன;
காதுகள் பிறரை நம்புகின்றன.- ஜெர்மானியப் பழமொழி.

(5) தேவையான அளவுக்கு மேல் உள்ளவை,
உன்னுடைய வாழ்கையை பாழாக்கிவிடும் - ஹென்றி டேவிட் தோரா.

Thursday, July 22, 2010

என் இனிய தமிழ்

இங்கே நான் படித்த (சுவைத்த) தமிழ் கவிதைகளை வரிசைபடுத்தி உள்ளேன்.

-------------------------------------------------------------------------

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளீர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி -
நம் மொழி - நம் மொழி - அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

-மு கருணாநிதி








உலக மொழிகளில் சிறந்தது எது?

எல்லா மனிதருக்கும் மொழி இன்றி அமையாதது. உலகில் பல மொழிகள் உள்ளன என்றபோதும், எது உயர்ந்தது என்பதும், எதை பயன்படுத்துவது என்பதும் ஒரு குழப்பமனதுதான்.

சிறந்தது எது?

எது உன்னை கருவில் இருந்து வளர்த்ததோ,
எது உன் தேவையை பூர்த்தி செய்ததோ,
எது உன் தாயை மகிழ்வித்ததோ
எது உன்னை சமுதாயத்திற்கு அறிவித்ததோ
எது உன்னை உலகம் அறிய செய்ததோ- அதுவே சிறந்தது (தாய் மொழி).

உன் தாய்மொழி சிறப்பை நீ சொல்லவில்லை என்றால், பின்பு அதை யார் செய்வார்.

தாய்மொழியை வளர்க்க சில யோசனைகளை :

௧) உன் தாய்மொழி தெரிந்தவரிடம் , உன் தாய்மொழிலே பேசு (அந்நிய மொழி மோகம் கொள்ளாதே).
௨) முடிந்தால் தாய்மொழில் கவிதை, கதைகள் எழுத்து, இல்லையேல் கவிதை, கதைகளை படி.
௩) தாய்மொழியை பழிக்காதே.(மற்ற மொழியோடு ஒப்பிடாதே)
௪) மற்ற மொழிகளை படி, அவற்றில் நல்லதை உன் மொழி மக்களுக்கு சொல்லு.
௫) உன் செயலை வைத்தே உன் தாய்மொழி மதிக்க படுகிறதை நீ உணரு.