Sunday, September 29, 2019

சிக்கன் பிரியாணி

 சிக்கன்  பிரியாணி


 தேவையான பொருட்கள்


 பாஸ்மதி அரிசி  - 1 கப்,
 தண்ணீர் - 1 ½  டம்ளர்
 நெய் - ஒரு டீஸ்பூன் 
 மிளகாய்தூள் - ¼ டீஸ்பூன்
 கடலை எண்ணெய் - 6  டீஸ்பூன் 
 மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன் 
 பட்டை - 1
 லவங்கம் - 6
 பிரியாணி இலை - 4
 சோம்பு - ½ டீஸ்பூன்
 தக்காளி - 1
 வெங்காயம் -
 பூண்டு - 15
 பச்சை  மிளகாய் - 2
 இஞ்சி - சிறிது
 சிக்கன் - 1/4 கிலோ


 செய்முறை

  1. பாஸ்மதி அரிசியுடன் எண்ணையை விட்டு தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பிரஷர் குக்கரில் சிறிது எண்ணெய்,  சிறிது நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, இலை போட்டு வதக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மேலும் வதக்கவும். இஞ்சி பூண்டு அரைத்து வைத்ததை பின்பு சேர்த்துக் கொள்ளவும், வெங்காயம் வதங்கியதும். சிக்கன், மஞ்சள் தூள்,  சிறிது மிளகாய்த்தூள் உப்பு போட்டு குக்கரில் வதக்கவும்.
  3. சிக்கன் ஒரு அளவு பதமானதும், அரிசி போட்டு பின்பு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும். பிரியாணி ரெடி!!!.


Thursday, September 26, 2019

சாம்பார்

தேவையான பொருள்

துவரம்பருப்பு 1/2 கப்
மஞ்சள் ¼  டீ ஸ்பூன்,
தக்காளி 2 
வெங்காயம் 1 
புளி சிறிது 
காய்ந்த மிளகாய்-3 
கடுகு 
எண்ணை  3 டீஸ்பூன் 
உப்பு அரை டீஸ்பூன்

 செய்முறை

பருப்பை கழுவி அதில் மஞ்சள், உப்பு போட்டு 1 1/2 தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில்
வைக்கவும்.6 விசில் வந்தவுடன் இறக்கி, பின்பு தக்காளி வெங்காயம் கத்திரிக்காய்
ஆகியவற்றைப் போட்டு 3 விசில் வந்தவுடன் குக்கரை ஆப் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாய்
கிள்ளிப் போட்டு தாளித்து, பருப்பை கடைந்து, அதில் ஊறவைத்த புளியை ஊற்றி,
உப்பு போட்டு, ஆச்சி மசாலா 1 டீஸ்பூன், பெருங்காயம் பவுடர் சிறிது போட்டு, ஒரு
கொதி வந்தவுடன் இறக்கவும். 

காரக்குழம்பு

தேவையான பொருள்


  1. எண்ணெய் 4 டீஸ்பூன்,
  2. கடுகு சிறிது அளவு
  3. வெந்தயம் கால் டீஸ்பூன்
  4. புளி ஒரு எலுமிச்சை அளவு
  5. உப்பு ஒரு டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
  7. மிளகாய்தூள் 2 டீஸ்பூன் 
  8. தக்காளி 2 நறுக்கவும்
  9. வெங்காயம் 1 நறுக்கவும்
  10. பூண்டு 10 பல்


செய்முறை
புளியை  சுடுதண்ணீரில்  1 ½ டம்ளர் ஊற்றி, ஊற வைத்து பின்பு கரைத்து
கொள்ளவும், அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு கரைத்துக்
கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் போட்டு
தாளித்து,  தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி, கரைத்து
வைத்துள்ள புளி குழம்பை ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கொதித்த பின் இறக்கவும்.