எல்லா மனிதருக்கும் மொழி இன்றி அமையாதது. உலகில் பல மொழிகள் உள்ளன என்றபோதும்,  எது உயர்ந்தது என்பதும், எதை பயன்படுத்துவது  என்பதும் ஒரு குழப்பமனதுதான்.
சிறந்தது எது?
எது  உன்னை கருவில் இருந்து  வளர்த்ததோ,
எது உன் தேவையை பூர்த்தி செய்ததோ,
எது உன் தாயை மகிழ்வித்ததோ
எது உன்னை சமுதாயத்திற்கு அறிவித்ததோ
எது உன்னை உலகம் அறிய செய்ததோ- அதுவே சிறந்தது (தாய் மொழி).
உன் தாய்மொழி சிறப்பை நீ சொல்லவில்லை என்றால், பின்பு அதை யார் செய்வார்.
தாய்மொழியை வளர்க்க சில யோசனைகளை :
௧) உன் தாய்மொழி தெரிந்தவரிடம் , உன் தாய்மொழிலே பேசு (அந்நிய மொழி மோகம் கொள்ளாதே).
௨) முடிந்தால் தாய்மொழில் கவிதை, கதைகள்  எழுத்து, இல்லையேல் கவிதை, கதைகளை படி.
௩) தாய்மொழியை பழிக்காதே.(மற்ற மொழியோடு  ஒப்பிடாதே)
௪) மற்ற மொழிகளை படி, அவற்றில் நல்லதை உன் மொழி மக்களுக்கு சொல்லு.
௫) உன் செயலை வைத்தே உன் தாய்மொழி மதிக்க படுகிறதை நீ உணரு.
 
No comments:
Post a Comment