Saturday, January 22, 2011

மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை?

   நாடு முழுவதும் ஆண்டுதோறும் வருமான கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை சுமார் 3.5 கோடி இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாத சம்பளம் பெறும் அரசு மற்றும்  தனியார் துறை ஊழியர்கள் .

இவர்களது வருமான கணக்கு விவரங்கள் பணியாற்றும் நிறுவனம் மற்றும் வங்கிக்கு தெரியும். ஆனால், இவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அவசியம் என்ற நிலை இருந்து வருகிறது.

இதை தவிர்க்கும் வகையில் மாத சம்பளம் தவிர வேறு வருமானம் இல்லாதவர்கள் வருமான கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி மத்திய நேரடி வரிகள் துறையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சுதிர் சந்திரா தீவிர பரிசிலனை செய்து வருகிறார்....

இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டால், வருமான வரித்துறை பணிசுமைகள் வெகுவாக குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்....(source: town times- issue43 - chennai)

No comments:

Post a Comment