Thursday, July 26, 2012

அம்பத்தூரில் 2 பாலங்களுக்கு அனுமதியா?

அம்பத்தூரில் டி.ஐ சைக்கிள் பகுதியில் ரயில்வே துறை சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாலம்
அமைக்கப்பட உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

இதற்க்கான பனிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இதே போல் பழைய M.T.H
சாலையில் சென்னை-திருவள்ளூர் சாலைக்கு குறுக்கே 21 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாலம் அமைப்பதற்கு
அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஏனினும், அம்பத்தூ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இவ்விரு திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக
அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பதே அம்பத்தூர் வாசிகளின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment