Tuesday, February 8, 2011

பெரிய கோடு

சிறுகதைகளில் படித்த நியாபகம்... ஒரு ராஜா தரையில் ஒரு கோடு வரைந்து....  இதை அழிக்காமலும், தொடாமலும் இந்த கோட்டை சிறியதாக்க முடியுமா என்று அமைச்சர்களை  பார்த்து கேட்பார்.... சிறுது நேரம் கழித்து ....புத்தியுள்ள அமைச்சர் ஒருவர் ...அந்த கோடு அருகே ஒரு பெரிய கோட்டை வரைவார்..  இதன் முலம் ராஜா வரைந்த கோடு சிறியதாக தெரியும்.... அமைச்சரின் புத்திசாலி தனத்தை பார்த்து ராஜா பரிசளிப்பார்....

இப்போது நடைமுறைக்கு வருவோம்....
முன்னால் மத்திய அமைச்சர் ராஜா 1.76 லட்சம் கோடி ஊழல் செய்தார்....என்றும் இதுதான் இமாலய ஊழல் என்று....பேசிவந்தார்கள் ..ஆனால் இந்த ஊழலை மிஞ்சும் அளவுக்கு ..இஸ்ரோவில்  சுமார் 2 லட்சம் கோடி ஊழல் என்றதும்.... எனக்கு அமைச்சர் போட்ட பெரிய கோடு  தான் நினைவுக்கு வருது.... 

No comments:

Post a Comment